உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலைக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

மலைக்கோவில் உண்டியல் காணிக்கை ரூ.1 கோடி

திருத்தணி: திருத்தணி முருகன்  கோவில் உண்டியலில், 35 நாட்களில், 1.01 கோடி ரூபாயை, பக்தர்கள்  காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திரு த்தணி முருகன்  மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து  செல்கின்றனர். மேலும், காணிக்கையாக  உண்டியலில் ரொக்கம், தங்கம் மற்றும்  வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை பக்தர்கள் செலுத்துகின்றனர். அந்த வகையில், 35 நாட்களில் பக்தர்கள்  செலுத்திய காணிக்கையை, நேற்று முன்தினம்,  கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன், மாவட்ட  இந்து அற நிலைய துறை உதவி ஆணையர் ஜான்சிராணி ஆகியோர் முன்னிலையில் உண்டியல்  திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.  இதில், ஒரு கோடியே, ஒரு  லட்சத்து, 69 ஆயிரத்து 466 ரூபாய் ரொக்கம், 954  கிராம் தங்கம், 7450 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. கோடை விடுமுறை  என்பதால் முரு கன் மலைக்கோவிலுக்கு  வழக்கத்திற்கு மாறாக பக்தர்கள்  அதிகளவில் வந்தனர்.  மேலும், இதுவரை கோடை விடுமுறை நாட்களின் போது   கிடைக்காத உண்டியல் வசூல், இந்த முறைதான் முதன் முதலாக, 1.01 கோடி ரூபாய்  வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !