விருதை கோவில்களில் கிருத்திகை வழிபாடு
ADDED :3451 days ago
விருத்தாசலம்: கிருத்திகையையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.
விருத்தாசலம் மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் ஜூன்.,3 ம் தேதி காலை சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, வெள்ளிக் கவசத்தில் சுவாமிகள் அருள்பாலித்தனர். விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சதேம சண்முக சுப்ரமணியர், 28 ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.