உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.

திருக்கோவிலுார்‚ கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திகேஸ்வர பெருமானுக்கு 108 பால்குட அபிஷகம்‚ அலங்காரம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்‚ நந்திகேஸ்வரருக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அலங்கார மண்டபத்தில் பிரதோஷ நாயகர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி, தீபாராதனை நடந்தது. சுவாமி புறப்பாடாகி சிவபுராணம்‚ நமச்சிவாய கோஷத்துடன் கோவிலை வலம் வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !