உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்

அய்யாவாடியில் நிகும்பலா யாகம் திரளான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறை: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த அய்யாவாடி கிராமத்தில் மகா பிரத்தியங்கிரா தேவி அம்மன் கோயில் உள்ளது.

எட்டு திக்கும் மயானத்தால் சூழப்பட்ட இந்த கோயிலின் ஐந்து வகையான இலைகளை கொண்ட தல விருட்சம் உள்ளது. ராவணன் மகன் மேகநாதன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து அம்பாளை பூஜித்து வேண்டிய வரங்க ளை பெற்றுள்ளனர். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அம்மாவாசை தோறும் மிளகாய் வற்றல் கொண்டு நடத்தப்படும் நிகும்பலா யாகம் பிரசித்திப்பெற்றது. இந்த யாகத்தில் கலந்துகொண்டு அம்பாளை சரணடைந்து, பிரார்த்தனை செய்தால் சத்ரு உபாதைகள் நீங்கி, சகல நன்மைகளும் கிடைக்கும்.

வைகாசி மாத அம்மாவாசையன்று காலை கோயில் மண்டபத்தி ல் அம்பாளை எழுந்தருளசெய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து மதியம் 1 மணிக்கு 16 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, கோயில் தலைமை அர்ச்சகர் தண்டபாணி குரு க்கள் யாக குண்டத்தில் மிளகாய் வற்றல், பட்டு புடவைகளை சேர்த்து நிகும்பலா யாகம் மற்றும் பூர்ணாஹுதியும் நடத்தி வத்ததார். தொடர்ந்து அம்பாலுக்கு அபிஷேகம் மற்றும் மகா  தீபாராதனை நடைபெற்றது. யாகத்தில் தஞ்சை மாவட்ட எஸ்.பி. சுதாகர், பிரபல சினிமா டைரக்டர் டி.ராஜேந்தர், எம்எல்ஏ.கள் பூம்புகார் பவுன்ராஜ், பெருந்துறை வெங்கடாசலம் உள் ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

யாகத்திற்கான ஏற்பாடுகளை சங்கர் குருக்கள் செய்திருந்தார். கும்பகோணத்தில் இ ருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர் வாகம் சார்பில் அண்ணதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !