மேல்நாரியப்பனுாரில் திருத்தல கொடியேற்று விழா!
ADDED :3453 days ago
சின்னசேலம்: சின்னசேலம் புனித அந்தோணியார் திருத்தலத்தில், திருவிழாவை முன்னிட்டு கொடியற்றும் நிகழ்ச்சி நடந்தது. சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுாரில் பிரசித்திப்பெற்ற புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தாண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு பங்குதந்தை சிங்கராயன் கொடியேற்றி வைத்து திருவிழாவை துவக்கி வைத்தார். வரும் 13ம் தேதி பெரிய தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்படுகளை பங்குதந்தை பால்ராஜ் தலைமையிலான அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், காரியக்காரர்கள், பங்கு மக்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.