உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

செஞ்சி: செஞ்சி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.  செஞ்சி  கோட்டை செல்லியம்மன், பூவாத்தம்மன், கிருஷ்ணாபுரம்  மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.  இதை முன்னிட்டு கடந்த 13ம் தேதி மதியம், மாரியம்மன், பூவாத்தம்மன், செல்லிய ம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு,  பூவாத்தம்மன், செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தனர். இரவு பூங்கரகம்  ஊர்வலம் நடந்தது. நேற்று முன்தினம் காலை பூங்கரக ஊர்வலமும், தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தலும் நடந்தது. மாலை 4  மணிக்கு மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரமும்,  மாரியம்மன் கோவிலில் ஊரணி பொங்கலும், இரவு கும்ப படையலும், பூங்கரகம் மற்றும்  சாமி ஊர்வலமும் நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டும், காப்பு களைதலும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !