உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் ரூ.67.18 லட்சம் வசூல்

திருத்தணி முருகன் கோவில் ரூ.67.18 லட்சம் வசூல்

திருத்தணி : முருகன் கோவில் உண்டியலில் பக்தர்கள், 28 நாட்களில், 67.18 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு செல்கின்றனர். மேலும், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். அந்த வகையில், கடந்த, 28 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) தனபாலன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு ஊழியர்கள் எண்ணினர். இதில், 67,18,542 ரூபாய் ரொக்கம், 579 கிராம் தங்கம், 3,913 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !