உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வடவெட்டி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.  செஞ்சி அருகே உள்ள வடவெட்டி அங்காளம்மன் ÷ காவிலில் அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதை முன்னிட்டு  காலையில் வினாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்  செய்னர். மாலை அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனையும், இரவு 7:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. இரவு 11:00 மணிக்கு  அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு  ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை  அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !