உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலூர் விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

கடலூர் விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம்

கடலூர்:கடலூர் வில்வ விநாயகர் மற்றும் கோண்டூர் கற்பக விநாயகர் கோவில்களில் நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.கடலூர், பழைய வண்டிப்பாளையம், வில்வ விநாயகர் கோவில் புதுப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாளை 15ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று (14ம் தேதி) காலை 9 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், பூர்ணாஹýதி, தீபாராதனை நடக்கிறது.மாலை 6.30 மணிக்கு வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், முதல் கால பூஜை நடக்கிறது. நாளை 15ம் தேதி காலை 9 மணிக்கு இரண்டாம் கால பூஜை, 10.35 மணிக்கு கடம் புறப்பாடு, 11 மணிக்கு விமானங்கள் கும்பாபிஷேகம், 11.15 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வீதியுலா நடக்கிறது.கோண்டூர்: டி.என்.சி. எஸ்.சி., நகரில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இன்று காலை 9 மணிக்கு மேல் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை நடக்கிறது. மாலை 5 மணிக்கு மேல் வாஸ்துசாந்தி, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் நடக்கிறது. நாளை (15ம் தேதி) காலை 7.30 மணிக்கு மேல் இரண்டாம் கால பூஜை, மூல மந்திர ஹோமம், கடம் புறப்பாடு, 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !