உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இன்று தேரோட்டம்

வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடித்திருவிழாவில் இன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. ஆடி மாத பவுர்ணமியையொட்டி 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா, கடந்த ஜூலை 11ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் நடந்தது. இன்று மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக மதுரை அழகர்மலை தீர்த்தம் கொண்டு அபிஷேகம் நடக்கும். ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் சவுந்தரராஜப்பெருமாள் சுவாமி தேரில் எழுந்தருள தேரோட்டம் ரத வீதிகள் வழியே வலம் வரும். தேரோட்டத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் முன்பாக ராகவேந்திரா ஆன்மிக அறக்கட்டளை சார்பாக காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாட்டினை செயல் அலுவலர் மகேந்திரபூபதி, தக்கார் வேல்முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !