உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரேணுகாம்பிகை கோவிலில் 22ம் தேதி செடல் உற்சவம்

ரேணுகாம்பிகை கோவிலில் 22ம் தேதி செடல் உற்சவம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த வில்லியநல்லுார் ரேணுகாம்பிகை கோவிலில் வரும் 22ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது. விழா  கடந்த 17ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து அன்று இரவு 9:30 மணிக்கு சுவாமி ஊர்வலம் நடந்தது. 18ம் தேதி  முதல் 21ம் தேதி வரை தினமும் இரவு காத்தவராயன் கதை நடக்கிறது. முக்கிய விழாவான செடல் உற்சவம் வரும் 22ம் தேதி  நடக்கிறது. அதனையொட்டி அன்று காலை 10:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 2:00  மணிக்கு கழுமரம் ஏறுதலும், மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவமும் நடக்கிறது. 23ம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு மற்றும் அம்மன்  வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !