உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிணத்துக்கடவு சிவலோகநாதருக்கு சிறப்பு வழிபாடு

கிணத்துக்கடவு சிவலோகநாதருக்கு சிறப்பு வழிபாடு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் நடந்த  பிரதோஷ வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் வந்திருந்து,  சிவலோகநாதரையும், நந்தியையும் வழிபட்டனர்.  கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி,  சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறு  போன்றவைகளால் அபிேஷக பூஜையும், தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள  கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து, சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்தியையும் வழிபட்டனர். பின், சிவலோகநாத  உற்சவ மூர்த்தி நந்தி வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின், பக்தர்கள்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.   இதேபோல், கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன்,  கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில் போன்ற கோவில்களில்  பிரதோஷ வழிபாடு வெகுவிமர்சையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !