தேய்பிறை அஷ்டமி: சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சொர்ண ஆகாஷ பைரவர்!
ADDED :3460 days ago
தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு சவுந்திரராஜப் பெருமாள் கோயிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சொர்ண ஆகர்ஷ்ன பைரவர் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆறு கால பூஜைகள் நடந்தது. பூஜையில், பால், இளநீர், பன்னீர், திருமஞ்சணம் ஆகிய அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.