உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுபழனியில் 108 பால்குடம்

நடுபழனியில் 108 பால்குடம்

அச்சிறுபாக்கம்: நடுபழனி எனப்படும் பெருங்கருணை முருகன் திருக்கோவிலில், 108 பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. செய்யூர் வட்டம், அச்சிறுபாக்கத்தை அடுத்த பெருங்கருணையில் மரகத தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது.  இக்கோவில் உள்ள பகுதி நடுபழனி என்று அழைக்கப்படுகிறது. 31ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு, 108 பால் குடங்களுடன்  கிரிவல விழா நேற்று  கோலாகலமாக நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது. சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !