உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழா

தஞ்சை பெரியகோவிலில் ஆடிப்பூர விழா

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, பிரகதீஸ்வரர், பிராகன்நாயகி உட்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும்,  (5.8.16) வெள்ளிக்கிழமை அபிஷேகம் நடந்தது.

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், ஆராதனை ஆகியவை நடக்கும். இதன்படி ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, (5.8.16) வெள்ளிக்கிழமை காலை, பிரகதீஸ்வரர், பிராகன்நாயகி அம்மன் திருமேனிக்கு, பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து, கோவில் நுழைவாயிலில் உள்ள விநாயகர், ராகு, நால்வர், சொக்கநாதர், சப்தலிங்கங்கள், சப்தகன்னிமார்கள், நடராஜர், வாராகிஅம்மன் உள்ளிட்ட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும், பால், சந்தனம், தயிர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின், மகாநந்திக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வாராஹி அம்மனுக்கு, வளையல் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !