திருத்தணி ஷீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :3346 days ago
திருத்தணி: ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று நடந்த பாலாபிஷேகத்தில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 குடம் பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு மூலவருக்கு மலர் அலங்காரம், தீபாராதனையும் நடந்தது. மாலை, 6:00 மணிக்கு சேஜ் ஆரத்தியும், இரவு, 7:00 மணிக்கு உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், கே.ஜி.கண்டிகை, தலையாறிதாங்கல் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.