உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தட்சிணாமூர்த்தி கோவிலில் கோலாகல பாலாபிஷேகம்!

தட்சிணாமூர்த்தி கோவிலில் கோலாகல பாலாபிஷேகம்!

காக்களூர்: காக்களூர் ஊராட்சி பூங்கா நகரில் உள்ள யோகஞான தட்சிணாமூர்த்தி பீடத்தில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருவள்ளூர் அடுத்த, காக்களூர் ஊராட்சி, பூங்கா நகர் யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் வியாழக்கிழமையான நேற்று, காலை 10:00 மணியளவில், குரு பகவானுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில், காக்களூர், பூங்கா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல், திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில், சிவ – விஷ்ணு கோவில்களில் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. மணவாளநகர் மங்களீஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, குரு பகவானை தரிசனம் செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !