நவராத்திரி: மீனாட்சி கோயில் அறிவிப்பு!
ADDED :5132 days ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் அறிக்கை :செப்.,28 முதல் அக்.,6 வரை நவராத்திரி விழா நடக்கிறது. இந்நாட்களிலும், அக்., 11 சாந்தாபிஷேகம் நடக்கும் தினத்தன்றும் கோயில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ அம்மனுக்கு தங்ககவசம், வைரக்கிரீடம், உபய திருக்கல்யாணம், தங்கரத உலா செய்யப்பட மாட்டாது. நவராத்திரி விழாவின் போது தினமும் மாலை 6 மணி முதல் அம்மன் மூலஸ்தான சன்னதியில் திரை போட்டு அபிஷேகம் இரவு 8.30 மணி வரை நடக்கும். அப்போது தேங்காய் உடைத்தல், அர்ச்சனைகள் நடத்தப்படமாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும், அலங்கார அம்மனுக்குதான் அர்ச்சனைகள் செய்யப்படும், என தெரிவித்துள்ளார்.