திருவாடானை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி விழா
ADDED :3373 days ago
திருவாடானை: திருவாடானை அருகே ஆற்றங்கரை மகாலிங்கமூர்த்தி கோயிலில் பூக்குழி விழா நடந்தது. பக்தர்கள் பால், பறவை, வேல் காவடி எடுத்துவந்து பூக்குழி இறங்கினர். இரவு அக்னி சட்டி, பூ தட்டு ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.