அழகு நாச்சியம்மன் கோவிலில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி
ADDED :3385 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த மஞ்சக்குழி கிராமத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவத்தையொட்டி கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி கடந்த 9ம் தேதி பந்தகால் முகூர்த்தம் விழா துவங்கி கொடியேற்றப்பட்டது. தினமும் அழகு நாச்சியம்மன் சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் கஞ்சி வார்த்தல் நடந்தது. நிகழ்ச்சியில், ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஜெயலலிதா செய்திருந்தார்.