பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :3384 days ago
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் பூச்சொரிதல் விழா நடந்தது. முன்னதாக மலர்களால் அலங்கரிக்கபட்ட ரதத்தில் அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு புஷ்பாபிஷகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். * திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.