உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா விமரிசை

ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ தேர் திருவிழா விமரிசை

 செங்கல்பட்டு:  ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் விழாவில், தேர் திருவிழா, நேற்று முன்தினம், நடந்தது.

செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ தர்மசம்வர்தனி அம்பிகா சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சித்திரை பிரம்மோத்சவம் விழா நடைபெறாமல் இருந்தது. அதன்பின், திருக்கோவில் நிர்வாகம், ஆத்துார் ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளையும் பொதுமக்களும் இணைந்து, சித்திரை பிரம்மோத்சவம் விழா நடத்த முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து முக்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன், சித்திரை பிரம்மோத்சவம் விழா கொடியேற்றத்துடன், கடந்த 19ம், தொடங்கியது. இதில், முக்கிய விழாவான தேர் திருவிழா, விமரிசையாக நேற்று முன்தினம், நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, வரும் 28ம் தேதி 63 நாயன்மார், திருக்கல்யாணம் 29ம் தேதி நடராஜர் விழா உள்ளிட்ட திருவிழாக்கள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா அறக்கட்டளை செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !