அம்மனுக்கு புடவை படைத்தல் விழா
ADDED :3384 days ago
தர்மபுரி: தர்மபுரி அன்னசாகரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், அம்மனுக்கு புடவை படைக்கும் விழா நேற்று நடந்தது. காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. மாலை, 4 மணிக்கு, பெரியாண்டிச்சி அம்மனுக்கு புடவை படைத்தல் விழாவும், மாலை, 6 மணிக்கு மேல் அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு புடவை படைத்தல் விழாவும் நடந்தது. இதையொட்டி, சிறப்பு அலங்காரம் அங்காளபரமேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.