விநாயகர் சிலை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
ADDED :3524 days ago
காஞ்சிபுரம் மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.அடுத்த மாதம், 5ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடும் போது, விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து, சுற்றுச் சூழலை பாதுகாக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என,தமிழக மாசு கட்டுப்பாட்டுவாரியம் அறிவித்துள்ளது. - நமது நிருபர் -