எமதண்டீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :3460 days ago
திண்டிவனம்: ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மயிலம் அருகே உள்ள ஆலகிராமத்திலுள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில், சிவராத்திரியை முன்னிட்டு, எமதண்டீஸ்வரருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.