உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த சிறுபாலையூர் முத்தாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 6 ம் தேதி காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், அனுக்ஞை, கணபதி ேஹாமம் நடந்தது. மாலை 5.00 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கரணம், அங்குரார்பணம், ரக்‌ஷாபந்தனம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், முதல்கால யாகபூஜை, இரவு 9.30 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. 7ம் தேதி காலை 6.00 மணிக்கு இரண்டாம்கால யாகபூஜை, திரவியஹூதி, பூர்ணாஹூதி, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, உபசாரம், தீபாராதனை நடந்தது. 8 ம் தேதி காலை 5.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜை, நாடிசந்தானம், ஸபர்சாஹூதி, திரவியாஹூதி, பூர்ணாஹூதி தீபாராதனை, 9.00 மணிக்கு கடம் புறப்பாடு செய்து, 9.30 மணிக்கு பரிவார தெய்வங்களுக்கு, 10.30 மணிக்கு முத்தாலம்மனுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !