உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணி ஆலய திருவிழா நிறைவடைந்தது!

வேளாங்கண்ணி ஆலய திருவிழா நிறைவடைந்தது!

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, நேற்று, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. நாகை அடுத்த வேளாங்கண்ணியில் அமைந்துள்ள ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, பெரிய சப்பர பவனி நடந்தது. மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, நேற்று காலை 6:௦௦ மணிக்கு, தஞ்சை ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப் பாடல் திருப்பலி நடந்தது. மாலையில், தேவாலய முகப்பில் ஏற்றப்பட்டிருந்த மாதாவின் உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடைந்தது. பின், தேவாலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர் நடந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !