உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்அருங்குணம் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா

மேல்அருங்குணம் முனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழா

செஞ்சி: மேல்அருங்குணம் முனீஸ்வரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.  செஞ்சி ஒன்றியம், மேல்அருங்குணம் முனீஸ்வரன்,  ஊத்துக்காட்டம்மன், வீரன் கோவில்களில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம், நேற்று நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு கோ  பூஜை, சூரிய பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 10:00  மணிக்கு கடம் புறப்பாடும், 10:30 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து 11 மணிக்கு மூனீஸ்வர பூஜையும், பகல் 12:00  மணிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !