பஞ்சமுக விநாயகர் ரத உற்சவம்
ADDED :3317 days ago
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அம்மன் நகர் பஞ்சமுக விநாயகர் ரத உற்சவத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி அம்மன் நகரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த, 5ம் தேதி முதல் மாலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் உற்சவ மூர்த்தியை கொலு அமர்த்தி மங்களார்த்தி பூஜை நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 7 மணிக்கு, கணபதி ஹோமம் நடந்தது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், மேளதாளம் முழங்க விநாயகர் ஊர்வலமாக வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஊர்வலம் அம்மன் நகரில் உள்ள அனைத்து வீதிகள் வழியாக சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.