ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா
ADDED :3512 days ago
திருவாடானை, திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அரும்பாலித்தார். ஆதிரெத்திேனஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவான், சுவாமி, அம்மனை தரிசித்தனர்.