உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணியார்பாளையம் கோவிலில் உற்சவம்

மணியார்பாளையம் கோவிலில் உற்சவம்

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலை மணியார்பாளையம் பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் நடந்தது. உற்சவத்தையொட்டி, பெருமாள், தாயார் உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக் கவசம் அணிவித்தனர். சேவை, சாற்றுமுறை, ஆராதனை நடந்தது. அலங்கார தீபங்கள் வழிபாடு, மந்திரங்களை வாசித்து உபச்சார பூஜைகள், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !