சோழவந்தான் கோயிலில் உழவாரப்பணி
ADDED :3363 days ago
தென்கரை : சோழவந்தான் தென்கரையில் நேரு யுவகேந்திரா நிறுவனம், தேனுார் பட்டாம்பூச்சி இளைஞர் மன்றம் சார்பில் துாய்மை இந்தியா திட்டத்தில் துப்புரவு பணி நடந்தது. தென்கரை கிராமத்தை தத்தெடுத்து மன்ற தலைவர் ரமாபிரபா, செயலாளர் அபர்ணா தலைமையில் 50க்கும் மேற்பட்ட களஉறுப்பினர்கள் அகிலாண்டேஸ்வரி அம்மன், திருமூலநாதர் சுவாமி கோயிலில் உழவாரப்பணியில் ஈடுபட்டனர்.