உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சவடீ கோவிலில் அன்னதானம்

பஞ்சவடீ கோவிலில் அன்னதானம்

புதுச்சேரி: புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில், தலை வாழை இலை போட்டு,  ஆயிரம் பேருக்கு  இன்று (24ம் தேதி) அன்னதானம் வழங்கப்படுகிறது. புதுச்சேரி – திண்டிவனம் மெயின் ரோடு பஞ்சவடீயில்,  36 அடி  உயர, ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு,  புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமை தோறும் பக்தர்களுக்கு அன்னதானம்  வழங்கப்படுகிறது. புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமையான இன்று (23ம் தேதி) பகல் 12:00 மணி முதல்  2.00 மணி வரை, ஆயிரம் பேருக்கு தலை வாழை இலை போட்டு உணவு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி  சாரிட்டபிள் டிரஸ்ட் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !