உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை!

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜை!

நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் பாமா ருக்குமணி சமேதராய் உற்சவர் வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !