தி.மலை அருணாசலேஸ்வரர் நவராத்திரி திருவிழா: ரிஷப வாகனத்தில் அம்மன் அருள்பாலிப்பு!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் நவராத்திரி திருவிழாவில், ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு நேற்று அருள்பாலித்தார். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழா கடந்த, 1ம் தேதி முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்திலிருந்து புறப்பட்டு, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கடந்த, 2ம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 3ம் தேதி கெஜலட்சுமி அலங்காரம், 4ம் தேதி மனோன்மணி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பராசக்தி அம்மன் ரிஷப வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, 6ம் தேதி ஆண்டாள் அலங்காரம், 7ம் தேதி சரஸ்வதி அலங்காரம், 8ம் தேதி அருள்தரும் லிங்க பூஜை அலங்காரம், 9ம் தேதி மஹிஷாசூரமர்த்தினி அலங்காரம், 10ம் தேதி சரஸ்வதி பூஜை சந்தன காப்பு அலங்காரம், 11ம் தேதி விஜயதசமி அன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில், பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடக்கிறது.