உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் ரூ24 லட்சம் பக்தர்கள் காணிக்கை

மேல்மலையனூர் கோவிலில் ரூ24 லட்சம் பக்தர்கள் காணிக்கை

செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 24 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையர்கள் விழுப்புரம் பிரகாஷ், திருவண்ணாமலை மோகனசுந்தரம் உண்டியல் எண்ணும் பணியை கண்காணித்தனர். இதில் பக்தர்கள் 24 லட்சத்து 42 ஆயிரத்து 255 ரூபாயும், 124 கிராம் தங்கமும், 335 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை, அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, சேகர் கண்காணிப்பாளர் வேலு, ஆய்வாளர் அன்பழகன், ஊழியர்கள் மணி, சதீஷ், சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !