பத்ரகாளியம்மன் கோவிலில் மக்கள் நலம் பெற வேண்டி ஹோமம்
ADDED :3406 days ago
ஈரோடு: ஈரோடு அடுத்த வில்லரசம்பட்டி பத்ரகாளியம்மன் கோவிலில், ஸ்ரீருத்ரவிதயா அகோரஸ்தர மூலமந்த்ர ஹோமம், ஸ்ரீஅதர்வன பத்ரகாளி மஹா மந்த்ர ஸம்புடித வீர சரபேஸ்வர ஹோமம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர். உலக மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பங்களை நீக்கவும், அனைவரும் இன்பத்துடன் வாழவும், மன அமைதி நிலவ, சிருங்கேரி ஸ்ரீமடம் முத்ராதிகாரி ல.புதூர் பத்மநாபஅய்யர் முன்னிலையில், பல்லடம் தத்தகிரி சுவாமிகள், சிருங்கேரி வேத பண்டிதர்கள் ஹோமத்தை நடத்தினர்.