முதல்வர் ஜெ., நலம்: கோவிலில் யாகம்
ADDED :3297 days ago
கரூர்: கரூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி, அபயபிரதான ரங்கநாதசுவாமி கோவிலில் சிறப்பு யாகம் நேற்று நடந்தது. இதில், தன்வந்திரி யாகம், மஹா விஷ்ணு, மகா பிரம்ம யாகம், கோபூஜைகளை போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார். மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன், துணை செயலாளர் சிவசாமி, கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் பங்கேற்றனர்.