திருப்பதி உண்டியல் வெளிநாட்டு நாணயங்களை இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை!
ADDED :3372 days ago
திருப்பதி : திருப்பதிக்கு வருகை தரும் வெளிநாட்டு பக்தர்கள் தங்கள் நாட்டு நாணயங்களை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகிறார்கள். இதனால், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் 35 ஆயிரம் கிலோ நாணயங்கள் திருப்பதி உண்டியலில் சேர்ந்துள்ளன. இவற்றை, ரிசர்வ் வங்கியின் ஆலோசனை பேரில், இந்திய ரூபாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.