உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.16.07 லட்சம் பக்தர்கள் காணிக்கை

ஆஞ்சநேயர் கோவில் உண்டியல் திறப்பு: ரூ.16.07 லட்சம் பக்தர்கள் காணிக்கை

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 16.07 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு, தமிழகம் மட்டும் அல்லாமல், பல்வேறு மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக, உண்டியலில் தங்கம், வெள்ளி நகை மற்றும் பணத்தை காணிக்கை செலுத்துகின்றனர். அந்த காணிக்கையை, குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை திறந்து, அறநிலையத்துறை கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் சூரியநாராயணன், ரமேஷ், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு, எண்ணும் பணி நேற்று காலை, 10:00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. தன்னார்வலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள், வங்கி பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அதில், 16 லட்சத்து, 7,373 ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது. மேலும், நான்கு கிராம் தங்கம், 39 கிராம் வெள்ளி நகையும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !