உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்!

பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி திருக்கல்யாணம்!

பழநி;கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழநி மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.பழநி மலைக்கோயிலில் கந்தசஷ்டி விழா அக்31ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டுபட்டத்துக் குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்ரமணியம் தலைமையில் விநாயகர் பூஜையுடன், ஆறு கலசங்கள் வைத்து சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு கலச புனிதநீரில் அபிஷேகம், சிறப்பு ஹோம பூஜை நடந்தது. காலை 11:45 மணிக்கு மாங்கல்யதாரணமும், மாலை மாற்றுதலும் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, வேத பாராயணம் நடந்தது. திருமண கோலத்தில் சண்முகர், வள்ளி,தெய்வானை அருள் பாலித்தனர். மஞ்சள் கயிறு, குங்குமம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.பெரியநாயகி அம்மன் கோயில்: பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 8:15மணிக்கு முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு சுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் திருவுலா வந்தார். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணைஆணையர் மேனகா செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !