திருவண்ணாமலை கோவிலில் ரூ.77 லட்சம் காணிக்கை
ADDED :3277 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும், ஆயிரக்கணக்கானோரும், பவுர்ணமி நாளில், லட்சக்கணக்கானோரும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசித்து செல்வர். பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, மாதந்தோறும் பவுர்ணமி முடிந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா முன்னிலையில், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டனர். காணிக்கையாக, 77 லட்சத்து, 33 ஆயிரத்து, 940 ரூபாய், 125 கிராம் தங்கம், 4 கிலோ 440 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்கள் இருந்தன.