உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவில்: பிரம்ம ரதத்தில் வீதியுலா

உலகளந்த பெருமாள் கோவில்: பிரம்ம ரதத்தில் வீதியுலா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ கைசீக ஏகாதசியை முன்னிட்டு‚ ஜீயர் பிரம்ம ரதத்தில் வீதியுலா நடந்தது. திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில்‚ ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பிரம்மரதம் ஏறும் வைபவம் நேற்று நடந்தது. அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் விஸ்வரூப தரிசனமும், 5:00 மணிக்கு கைசீகபுராணம் வாசிக்கப்பட்டது. சுவாமிக்கு 12 முறை துவாதசி ஆராதனை நடந்தது. காலை 7:00 மணிக்கு ஜீயர் சுவாமிகள் பிரம்ம ரதத்தில் புறப்பாடாகி‚ முக்கிய வீதிகள் வழியாக சென்று ஜீயர் மடத்தை அடைந்தார். பாகவத கோஷ்டிகளின் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. பக்தர்களுக்கு ஜீயர் சுவாமிகள் ஆசிர்வாதம் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !