உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் பாலாபிஷேகம்

திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, பாலாபிஷேகம் நடந்தது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான  மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, செவ்வாய் கிழமையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு, 108 லிட்டர்  பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, உச்சிகால பூஜையும், மாலை, 3:00 மணி முதல், மாலை, 4:30 வரை ராகுகால பூஜையும் நடந்தது. காலை முதல், மாலை வரை, திரளான பெண்கள்  கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில், திருத்தணி, மத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !