வீரராகவப் பெருமாள் கோவிலில் கருடாழ்வார் வாகனம் வெள்ளோட்டம்!
ADDED :3407 days ago
திருப்பூர்: காத்தல் கடவுளான எம்பெருமான், நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும், சயன கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இதில், ஆதி சேஷ சயன திருக்கோலத்தில் வீரராகவ பெருமாளாக திருப்பூரில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் கருடாழ்வார் வாகனம் புதுப்பொலிவு பெற்று வெள்ளோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.