உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் 4 நாட்களில் ரூ.31.62 லட்சம் வசூல்

பழநியில் 4 நாட்களில் ரூ.31.62 லட்சம் வசூல்

பழநி, சபரிமலை சீசன், மார்கழி மாத பக்தர்கள் கூட்டத்தால் பழநி மலைக்கோயில் உண்டியலில் 4 நாட்களில் ரூ.31.62 லட்சம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயிலில் நான்கு நாட்களுக்குபின் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.31 லட்சத்து 62ஆயிரத்து 334 கிடைத்துள்ளது. தங்கம் 175 கிராம், வெள்ளி 1100 கிராம், வெளிநாட்டு கரன்சிகள்-125, தங்கம் மற்றும் வெள்ளியிலான வேல், உருவம் போன்ற பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர் மேனகா, கோயில் பணியாளர்கள், வங்கிப்பணியாளர்கள், கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !