மேல்தாங்கல் வெங்கடேசபெருமாள் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :3198 days ago
செஞ்சி: மேல்தாங்கல் வெங்கடேசபெருமாள் கோவிலில், திருவிளக்கு பூஜை நடந்தது. செஞ்சி தாலுகா, சோழங்குணம் மதுரா மேல்தாங்கல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசபெருமாள் மற்றும் பால முருகன் கோவிலில், புத்தாண்டை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 திருவிளக்கு மற்றும் மாங்கல்ய பூஜை நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.