பண வசதி இல்லை என்பதால் நேர்த்திக் கடனைத் தள்ளிப் போடலாமா?
ADDED :3390 days ago
பண வசதி இல்லை என்றாலோ அல்லது இப்போது செய்ய முடியாது என்றாலோ, நாம் செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களை ஒரு மஞ்சளில் நனைத்த துணியில், ஒரு ரூபாயோ, பதினோரு ரூபாயோ, நூத்தியோரு ரூபாயோ முடித்து, அதனை ஸ்வாமியிடம் வைத்து விட்டு, பின்னர் வசதி வரும்போது அதனை செய்ய வேண்டும். இது, பணம் வசதி இல்லை என்றாலோ, அப்போது செய்வதற்கு நேரம் இல்லை என்று சொன்னாலே ஒரு வழி. ஆனால் அந்த நேர்த்திக்கடனை ஞாபகமாக பின்னர் செய்துவிட வேண்டும், எக்காரணம் கொண்டும் மறந்துவிடக் கூடாது.