உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் நாளை ஆருத்ரா தரிசனம்

உத்தரகோசமங்கையில் நாளை ஆருத்ரா தரிசனம்

கீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சுவாமி கோயிலில் நாளை ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி சமேத மங்களேஸ்வரி தாயார் கோயில் மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயம். இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனியில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம்.

கடந்த ஜன.,2ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நாளை (ஜன., 10) காலை 9 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களையும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. ஜன.,11ல் ஆருத்ரா தரிசனத்தில் காலை 11:00 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின்னர் இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தரும் நிகழ்ச்சியும், அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கும்.ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !