உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் 10ல் தேரோட்டம்

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் 10ல் தேரோட்டம்

திருமழிசை: திருமழிசை, ஜெகந்நாத பெருமாள் கோவிலில், தையில் மகம் திருஅவதார மகோற்சவத்தை முன்னிட்டு, வரும் 10ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. திருவள்ளூர்– பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ளது. திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள ‘பக்திஸார்’எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, ‘தை யில் மகம்’ திருஅவதார மகோற்சவம், கடந்த, 2ம் தேதி துவங்கியது. முன்னதாக, பிப்.,1 மாலை , ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. தையில் மகோற்சவ திருவிழாவை முன்னிட்டு, காலை, மாலையில் சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்ளுக்கு அருள்­பாலித்து வருகிறார். நிகழ்ச்சியின் முக்கிய திருவிழாவான தேரோட்டம், வரும் 10ம்தேதி, காலை 8:30 மணிக்கு, நடைபெறும். விழாவில், ஐந்தாம் நாளான, நேற்று முன்தினம் இரவு, ஜெகந்நாத பெருமாள் கருட வாகனத்திலும், திருமழிசை ஆழ்வார் ஹம்ச வாகனத்தில் பக்தர்­களுக்கு அருள்­பாலித்தனர். விழா, வரும் 13ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !